எம்டிசி இயக்குநரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

சென்னை: சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (54). மாநகர போக்குவரத்து கழகத்தில் மேலாண் இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 20ம் தேதி காலை திருமங்கலம் பூங்கா சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது,  பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், அவரிடமிருந்து விலையுயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்தனர். அதில், சைதாப்பேட்டையை சேர்ந்த துளசிநாதன் (19), அமைந்தகரையை சேர்ந்த சிறுவன் செல்போன் பறித்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்து, பைக், செல்போனை பறிமுதல் செய்தனர்.

Related Stories: