இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதால் இந்திய குடியுரிமை வழங்க முடியாது!: ஐகோர்ட் கிளையில் ஒன்றிய அரசு வாதம்..!!

மதுரை: இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள். சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது. தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு விசாரணையின் போது ஒன்றிய அரசு வழக்கறிஞர் வாதிட்டார். தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என அகதிகள் முகாமில் உள்ளவர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

Related Stories: