மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை தேர்வு செய்தால் நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கை!: தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம்..!!

டெல்லி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை தேர்வு செய்தால் நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை தமிழக அரசு தேர்வு செய்தால் நடப்பாண்டிலேயே 50 முதல் 100 மருத்துவ மாணவர்களுக்கான சேர்க்கையை தொடங்கலாம் என ஒன்றிய சுகாதாரத்துறை செயலர், தமிழக தலைமைச் செயலருக்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார். அதற்கான செலவீனம், அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் தேர்வு, உட்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை ஒன்றிய சுகாதாரத்துறையே ஏற்றுக்கொள்ளும் எனவும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அதாவது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சார்பாக தற்காலிகமான இடத்தில் நடப்பாண்டில்  50 முதல் 100 மாணவர் சேர்க்கைக்கான வசதிகள், வகுப்பறைகள், அலுவலகத்திற்கு தேவையான இடங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு தேர்வு செய்ய வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தற்காலிக இடத்தை தமிழக அரசு தேர்வு செய்து வழங்கினால் அதற்கான செலவுகள், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்வு, உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய அனைத்தையும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொள்ளும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக  தற்காலிக இடத்தில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு மற்றும் மருத்துவ மாணவர் சேர்க்கையை தொடங்க உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு ஜூலை 30ம் தேதிக்கு விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் ஒன்றிய சுகாதாரத்துறை செயலர், தமிழக தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: