திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த வடக்குபட்டு வயல்வெளியில், நேற்று மாலை மண்ணில் புதைத்த நிலையில் மர்ம பொருட்கள் காணப்பட்டன. அந்த வழியாக சென்ற விவசாயிகள் அதை பார்த்து அதிர்ச்சியைடந்தனர். தகவலறிந்து, திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ஆய்வு செய்தனர். இரவு 7.30 மணியானதால், இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால், அந்த பொருளை என்னவென்று கண்டுபிடிக்க போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.