டெல்லி: அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஆயிரத்திற்கும் அதிகமாக உயர்த்த மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு திட்டமிட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரான மணீஷ் திவாரி 2024ம் ஆண்டுக்கு முன்பே மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமாக உயர்த்துவதற்கான முன்மொழிவு இருப்பதாக பாரதிய ஜனதா எம்.பி.க்கள் கூறியதாக ட்வீட் செய்துள்ளார். டெல்லியில் தற்போது கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற மக்களவையில் 1000 எம்.பி.க்கள் அமரும் வசதியுடன் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.