திருவனந்தபுரம்: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ளது உப்புதரை கிராமம். இங்குள்ள புளிங்கட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ், ெசல்வராஜ். இருவரும் அங்குள்ள தோட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். கடந்த 4 நாட்களாக சுரேஷ், செல்வராஜ் வீடுகளில் இரவு பகலாக கற்கள் தொடர்ந்து விழுந்தன. வெளியே வந்து பார்த்தபோது யாரையும் காணவில்லை. இது குறித்து வாகமண் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இருவரது வீட்டுக்கும் சென்ற விசாரித்தனர். அப்போதும் கற்கள் விழுந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து இடுக்கி மாவட்ட புவியியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.