ஊட்டி: கோயில் திருவிழாவில் ஜெனரேட்டர் புகையால் மூச்சுத்திணறி 2 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். ஊட்டி அருகே சோலூர் பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் ஒசகேரி என்ற இடத்தில் உள்ள சிவன் கோயிலில் தெவ்வபண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடினர். இதில் பங்கேற்ற கோட்டட்டி கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (36), கீழ் தட்டணேரி மூர்த்தி (49), பேக்கடை அஜித்குமார் (25), ரதீஷ் (21), பிக்ககண்டி விக்னேஷ் (27) ஆகிய 5 பேர் அங்குள்ள அறையில் இரவு தங்கினர். அப்போது சோலூர் பகுதியில் காற்றுடன் மழை பெய்து மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.