மன்னார்குடி : திருவாரூர் மாவட்டம், திருமக்கோட்டை அருகே மேலநத்தம் கிராமம் மேலதெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம்(58). விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கு அறிவுடைசெல்வி(53) என்ற மனைவியும், சதிஷ்(24) என்ற மகனும் இருந்தனர். உடல்நலம் சரியில்லாத நிலையில் இருந்து வந்த கல்யாணசுந்தரம் கடந்த மாதம் இறந்துவிட்டார். கல்யாணசுந்தரம் இறந்த சோகம் இருவரையும் வாட்டி வந்தது. தந்தை மீது அதிகம் பாசம் வைத்திருந்த சதிஷ் அவர் இறந்த பிறகு வேலைக்கு செல்லாமல் மன வருத்தத்தில் வீட்டில் இருந்து வந்துள்ளார். அவருக்கு தாய் அறிவுடைச்செல்வி ஆறுதல் கூறி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி சதிஷ் விஷமருந்தி வீட்டில் மயங்கி கிடந்தார்.