ஆவடி: ஆவடி அருகே திருமண ஆசைகாட்டி பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் தென்றல் நகர் மெயின் ரோட்டில் ஒரு தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 17 வயதில் மகள் உள்ளார். இவர் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் இவர்களது உறவினரான ஜோதி (24) என்ற வாலிபர், கடந்த ஒரு ஆண்டாக சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் சிறுமி வீட்டில் அவரது பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் சென்ற ஜோதி, திருமண ஆசைகாட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.