சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

சித்தூர்: சித்தூர் அருகே 7வயது சிறுமியை பலாத்காரம் செய்த வடமாநில வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ₹50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கங்காதர்(31). இவர் கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவி உட்பட குடும்பத்தினருடன் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பல்லியில் தங்கி ‘பிளாஸ்டர் ஆப் பாரிஸ்’ அட்டை மூலம் பொம்மைகள் செய்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2018ம் ேததி ஜனவரி மாதம் அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு, சாக்லெட் வாங்கித்தருவதாக கூறி அழைத்துச்சென்ற கங்காதர், அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து மதனப்பல்லி முதலாவது காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சித்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய மாவட்ட நீதிபதி பிரசாத், சிறுமியை பலாத்காரம் செய்த கங்காதருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ₹50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: