திருவொற்றியூர்: பொதுமக்களுக்கு தங்கு தடை இல்லாமல் மின்சாரம் வழங்கவும், மழைகாலத்தில் பொதுமக்களுக்கு மின் தாக்குதல் ஏற்படாமல் பாதுகாக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி தமிழ்நாடு மின்சார வாரியம், சென்னை மின் பகிர்மான வட்டம், வடக்கு திட்டத்தின் சார்பாக வியாசர்பாடி, பெரம்பூர், தண்டையார்பேட்டை, பொன்னேரி கோட்டங்களில் மின் கூட்டு பராமரிப்பு பணி நேற்று முன்தினம் நடைபெற்றது.