சென்னை: வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்து தனியார் வங்கி காவலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராணி (38, பெயர் மாற்றம்). இவர் நேற்று கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்தார். அதில், எனது கணவருடன் 2 நாள் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தோம். அப்போது வீட்டில் 15 வயது மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள். வீட்டின் அருகே தனியார் வங்கியில் காவலாளியாக வேலை செய்து வரும் கே.ேக.நகரை சேர்ந்த புருஷோத்தமன் (46) என்பவரிடம், மகளை பார்த்து கொள்ளும் படி கூறிவிட்டு சென்றோம்.