ஊட்டி : மழை காரணமாக ஊட்டி புதுமந்து சாலையில் மழை காரணமாக சாலையோர தடுப்புச்சுவர் இடிந்துள்ளது. தென்மேற்கு பருவ காற்றின் தீவிரம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, மஞ்சூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நல்ல மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்யும் சூழலில் மரம் விழுதல், மண்சரிவு போன்ற பெரிய அளவிலான இடர்பாடுகள் ஏற்படவில்லை. கடந்த வாரத்தில் கூடலூர் சாலையில் சில இடங்களில் விழுந்த மரங்களை தீயணைப்புத்துறையினர் வெட்டி அகற்றினர்.