பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் பதவியை எடியூரப்பா விரைவில் ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநில அமைச்சரவையில் பெரும் மாற்றம் ஏற்பட உள்ளது என மாநில பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. ஆனால் அந்த ஆடியோவில் வரும் குரல் தன்னுடையது அல்ல என நளின் குமார் மறுத்திருந்தார். இருப்பினும் எடியூரப்பாவின் ராஜினாமா உறுதியாகிவிட்டதாகவும், அவரது பதவி காலத்தின் 2வது ஆண்டு நிறைவு நாளான ஜூலை 26ம் தேதிக்கு பிறகு ராஜினாமா செய்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.