தமிழகம் மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் Jul 20, 2021 மாதர் சங்கம் திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, 11 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டார். அச்சம்பவத்தில், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்தை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகிகள் ஜெயந்தி தலைமை தாங்கினார். வாலண்டினா, மனோன்மணி, கலையரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, கைது செய்த குற்றவாளியை பிணையில் விடக்கூடாது. கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
ஆக்ரோஷமான நாய் இறக்குமதி தடை விவகாரம் பொதுமக்களிடம் கருத்து கேட்கலாம் இறுதி முடிவு எடுக்க கூடாது: மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரம் நயினார் நாகேந்திரனின் ஊழியர்கள் மனு தள்ளுபடி: விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
அதிமுக செய்த தவறுகளுக்காக தண்டனை தமிழ்நாட்டில் தாமரை மலராது என மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்: கனிமொழி எம்பி பேட்டி