துபாய். ‘செங்கால் நாரை’ எனப்படும் பிளமிங்கோ பறவைகள், ஆழமற்ற ஏரிகள் மற்றும் சதுப்பு நிலங்களில் வாழும். மணிக்கு 37 மைல்கள் பறக்கும் ஆற்றல் படைத்தவை. இவற்றின் இளம் குஞ்சுகள், துருக்கியின் வறண்ட ஏரியில் ஆயிரக்கணக்கில் செத்து கிடப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. துருக்கியின் 2வது மிகப்பெரிய ஏரிகளில் உப்பு ஏரியும் (டாஸ் ஏரி) ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பிளமிங்கோ பறவைகள் வந்து தங்கி செல்லும். இங்கு தங்கும் போது இனப்பெருக்கத்திலும் ஈடுபடும். இந்நிலையில், இந்தாண்டு வந்த பறவைகளால் பொறிக்கப்பட்ட இளம் குஞ்சுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை ஏரியின் வறண்ட பகுதியில் இறந்து கிடக்கின்றன. இது, உலகம் முழுவதும் உள்ள சுற்றுசூழல் ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.