விதிஷா: மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் லால் படார் கிராமத்தில் 50 அடி ஆழ கிணறு ஒன்றில் வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு தவறி விழுந்தார். இதில் 20 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்தது. இதனை தொடர்ந்து கிணற்றில் விழுந்த நபரை மீட்பதற்காக சிலர் கயிறு மூலமாக உள்ளே இறங்கினர். இதை அப்பகுதி மக்கள் கிணற்றின் அருகே நின்று வேடிக்கை பார்த்தனர். இந்நிலையில், எதிர்பாராதவிதமாக கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து, அங்கு நின்றிருந்த பலர் கிணற்றுக்குள் விழுந்தனர்.