டேராடூன்: கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முகக் கவசங்களை கட்டாயம் அணிந்துகொள்ள, பொது மக்களை மத்திய, மாநில அரசுகள் கட்டாயப்படுத்துகிறது. ஆனால் முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்கள், மோசமான நடத்தையை பின்பற்றுவது கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. உத்தரகாண்ட் மாநில ஆளும் பாஜக அமைச்சர் சுவாமி யதேஸ்வரானந்தா, சக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் தனது முகக்கவசத்தை கால் விரலில் மாட்டிவிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல், இந்த கூட்டத்தில் இருந்த மற்ற நான்கு பேரும் முகக்கவசம் அணியவில்லை.