மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி பெய்து வருவதால், நகரின் பெரும்பாலான சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் ரயில் தண்டவாளம் மழைநீரில் மூழ்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நகரில் பெய்த கனமழையைத் தொடர்ந்து மும்பையின் தஹிசார் பகுதி நீரில் மூழ்கியது. மும்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த 24 மணிநேரத்தில், நகரத்திலும் புறநகர்ப் பகுதிகளிலும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளது.