ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆன்லைன் வானொலி மூலம் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட அரசு ஆசிரியர்கள் ஒன்றிணைந்து வானொலி மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதில் பல்வேறு ஆசிரியர்கள் தங்கள் துறை சார்ந்த வகுப்பு மற்றும் நீதிநெறி கதைகளை ஆடியோவாக பதிவிட்டு வருகின்றனர். இதனை மாணவர்கள் டவர் சரியாக கிடைக்காத இடத்திலும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.