அரசியல் மின்தேவைக்காக மேகதாதுவில் அணை கட்டுவது ஏற்புடையதல்ல கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்க தமிழகம் தயாராக உள்ளது: கே.எஸ்.அழகிரி பேட்டி Jul 16, 2021 மேக்காடு எஸ் அழகி சென்னை: கர்நாடகாவில் மின்சாரம் தேவை என்றால் அதை வழங்க தமிழகம் தயாராக உள்ளது என்று கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழக காங்கிரஸ் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் பேரணி சென்னையில் நேற்று நடைபெற்றது. தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் தொடங்கிய பேரணிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேரணியை தொடங்கி வைத்தார். இப்பேரணி தி.நகர் திருமலைப்பிள்ளை சாலை வழியாக சென்று அங்குள்ள காமராஜர் இல்லத்தில் நிறைவடைந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.இப்பேரணியில், மேலிட பொறுப்பாளர் ரிவல்ல பிரசாத், மூத்த தலைவர்கள் தங்கபாலு, செல்லக்குமார், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, எம்பிக்கள் ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், பொருளார் ரூபி மனோகரன் எம்எல்ஏ, மகிளா காங்கிரஸ் தலைவி சுதா, சுமதி அன்பரசு, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், நாஞ்சில் பிரசாத், முத்தழகன், அடையார் துரை, ரஞ்சன் குமார், ஜெ.டில்லிபாபு உட்பட பலர் கலந்து கொண்டனர். பேரணியின் போது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் மேகதாது அணையை கட்ட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மின்சார தேவைக்காக மேகதாது அணை கட்டுவதாக கர்நாடக அரசு தெரிவிக்கின்றது. இதனால், கர்நாடகத்திற்கு மின்சாரத் தேவையென்றால் தமிழகமே மின்சாரத்தை வழங்க தயாராக உள்ளது. எனவே மேகதாது அணைகட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்.
2014 முதல் பா.ஜ.க. அளித்த வாக்குறுதி அனைத்தும் பணமின்றி திரும்பிய காசோலை போன்றது என்று ப.சிதம்பரம் விமர்சனம்
பரம்பரை சொத்துவரிக்கு எதிரான போராட்டம் ஒரு வேடிக்கை.. பாஜக தலைவர்கள் பொய்யை உண்மையாக்குகிறார்கள்: ப.சிதம்பரம்
மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி பூசல் தீவிரம்; எடப்பாடி-செங்கோட்டையன் மோதல்: மாநில தலைவர் பதவி கொடுத்தால் பாஜவில் சேரவும் முடிவு
பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி பூசல்; அதிமுக மாஜி அமைச்சர் முன்பு நடுரோட்டில் நிர்வாகிகள் மோதல்: வீடியோ வைரல்
ரத்தம் சிந்தி பெற்ற தொழிலாளர்களின் உரிமைகளை ஒன்றிய பாஜ அரசின் 10 ஆண்டு கால ஆட்சி சிதைத்து விட்டது: மே தின பூங்காவில் மரியாதை செலுத்திய பின் செல்வப்பெருந்தகை பேட்டி
இந்திய மக்களுக்கு இந்த தேர்தல் வாழ்வா? சாவா? பிரச்னை; மோடி கபட நாடகம் ஆடி மக்களை ஏமாற்ற முடியாது: செல்வப்பெருந்தகை அறிக்கை
கோடையின் கொடுமை தணிக்க நீர்மோர் கொடுப்போம்: கட்சி நிர்வாகிகளுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்