மும்பை: தகவல் சேமிப்பு விதிமுறைகளை மீறியதால், வரும் ஜூலை 22ம் தேதி முதல் புதிய வாடிக்கையாளர்களுக்கு மாஸ்டர் கார்டு வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும் விசா, மாஸ்டர் கார்டு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வழங்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, பணம் செலுத்தும் முறை தொடர்பான தரவுகளை சேமிக்கும் சர்வரை இந்தியாவில் வைக்க வேண்டும்.