புல்வாமா: ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் சிலர் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூசு நடத்தினர். பதிலடியாக பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிங்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.