கொடைக்கானல்: இரண்டு ஆண்டுகளுக்கு பின் வானில் செவ்வாய், வெள்ளி கோள்கள் ஒரே நேர்கோட்டில் வந்த அரிய நிகழ்வை கொடைக்கானலில் பொதுமக்கள் தொலைநோக்கி மூலம் கண்டுகளித்தனர். வானில் சூரியனை, பூமியை போல் பல கோள்கள் சுற்றி வருகின்றன. இதில் பூமிக்கு அருகில் உள்ள செவ்வாய்க்கோளும், வெள்ளிக்கோளும் ஒன்றை ஒன்று நெருங்கி வரும் அரிய நிகழ்வு கொடைக்கானலில் நேற்று முன்தினம் வானில் தெளிவாக தென்பட்டது. இந்த 2 கோள்களுக்கும் இடையே வானில் 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும். மேலும் செவ்வாய், வெள்ளி கோள்களுக்கு சுமார் 4 டிகிரி தொலைவில் பிறை சந்திரன் தென்பட்டது. இதனை கொடைக்கானல் பொதுமக்கள் தொலைநோக்கிகள் மூலம் கண்டுகளித்தனர்.