திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் ஆனிவார ஆஸ்தானம், யுகாதி பண்டிகை, ஆண்டு பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகியவற்றுக்கு முன்னதாக வரும் செவ்வாய்க்கிழமைகளில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மை பணி) நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு வரும் 16ம் தேதி ஆனி வார ஆஸ்தானம் நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று காலை 6 மணியளவில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. மூலவர் ஏழுமலையான் மீது பட்டு வஸ்திரம் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கல் மண்டபங்கள், தங்க கொடிமரம் உள்ளிட்ட அனைத்து இடங்களும், புனித தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது.