சிச்சுவான்: சீனாவில் கொட்டிதீர்த்த மிக பலத்த மழையால் அந்நாட்டில் தென்மேற்கு மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த சில நாட்களாக பெய்து வந்த பெருமழையால் சிச்சுவான், தோன்சுவான், தாங்சுவான் மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. 75க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் தனி தீவுகளாக மாற்றியிருக்கிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். தொடர்ந்து பாகே, யாங்ஷீ, ஜியாலிங் ஆகிய நதிகளில் வெள்ளம் அபாய அளவை தாண்டி கரைபுரண்டு ஓடுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட கிராமவாசி டியூ ஜியங் குறிப்பிட்டதாவது, பல நாட்களாக பெய்து வந்த மழை நின்றுவிட்டது. ஆனால் வெள்ளம் நொடிக்கு நொடி அதிகரித்து வருகிறது.