தங்கவயல்: கர்நாடகா மாநிலம், தங்கவயல் பஸ் நிலையத்தில் நேற்று, கன்னடத்தை காப்போம்’ என்ற போராட்டம், கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நடந்தது. கட்சி தொண்டர்களுடன் நகரசபை பஸ் நிலையம் வந்த வாட்டாள் நாகராஜ், அங்கிருந்த போலீஸ் டி.எஸ்.பி. உமேஷிடம், ``பஸ் நிலைய பெயர் பலகையில் உள்ள தமிழ் எழுத்துக்களை அழிக்க வந்துள்ளேன்’’ என்றார். அதற்கு டி.எஸ்.பி. நகரசபை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து, அவர்களுக்கு அவகாசம் தந்தால் அவர்களே நீக்கி விடுவார்கள் என்றார். அதை ஏற்க மறுத்த வாட்டாள் நாகராஜ், பஸ் நிலைய முகப்பு வாயிலில் மேலே ஏறி தமிழ் எழுத்துக்களை அழிக்க அறிவுறுத்தினார். உடனே வளைவின் மேலே ஏறிய கட்சி தொண்டர்கள் தமிழில் எழுதி இருந்ததை அழித்தனர்.