பியாங்யாங் ; வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நலம் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகும் நிலையில், அந்நாட்டின் நிறுவன தலைவரின் நினைவு தின நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று நேற்று அஞ்சலி செலுத்தினார். நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகி கிம் ஜாங் உன் அவர்களின் எடை 20 கிலோ குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. அவர் மெலிந்து காணப்பட்டதை பார்த்து அந்நாட்டு மக்கள் வேதனை அடைந்து கண்ணீர் சிந்தினர்.இந்த நிலையில் அதிபர் கிம் ஜாங் உன்னின் தாத்தாவும் அந்நாட்டு நிறுவன தலைவரான கிம் சங்கின் 27வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தலைநகர் பியாங்யாங் நகரில் அவரது நினைவகம் அமைந்துள்ள அரண்மனைக்கு அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்துவதற்கு அணிவகுத்துச் சென்றனர்.