சேலம் பெரியார் பல்கலைக்கழத்தில் ஆசிரியர் பதவி உயர்வில் நடந்த முறைகேட்டை விசாரிக்க குழு: உயர்கல்வித்துறை நடவடிக்கை

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழத்தில் ஆசிரியர் பதவி உயர்வில் நடந்த முறைகேட்டை விசாரிக்க குழு அமைத்து உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. உயர்கல்வித்துறை துணை செயலாளர் சங்கீதா, அரசு இணை செயலாளர்கள் இளங்கோ, ஹென்றிதாஸ் குழுவில் உள்ளனர். பதவி உயர்வில் நடந்த முறைகேடு குறித்து குழு விசாரித்து 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் பெரியார், மதுரை காமராஜர், அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பதவி உயர்வில் முறைகேடு என புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை குழு அமைத்தது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு உயர்கல்வித்துறை கடிதம் அனுப்பி உள்ளது.

Related Stories: