டெல்லி :ஒன்றிய அமைச்சரவையில் திடீரென மேற்கொள்ளப்பட்ட மெகா மாற்றங்களை காங்கிரஸ் உள்ளிட்ட தலைவர்கள் சாடி உள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ஹர்ஷவர்தன் விலகியதன் மூலம் கொரோனா பேரிடர் விவகாரத்தில் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டதை ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டு இருப்பதாக முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அனைத்துமே சரியாக நடந்தால் அதற்கான நற்பெயர் பிரதமருக்கு சென்றுவிடும். ஒருவேளை தவறு நடந்தால் அமைச்சர் தான் அதற்கு பொறுப்பு ஆவார் என்பதை புரிந்து கொள்ளலாம் என்று சாடியுள்ளார்.