டெல்லி : மோடி அரசு பதவியேற்ற பின் மீனவர்கள் மீதான தாக்குதல் நின்றுவிட்டது என்று ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஒன்றிய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பிரதமர் மோடி கொடுத்துள்ளார்.தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் அமைச்சரவையில் இடம் பெறுவேன்.தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்படுவேன்.