மாஸ்கோ: ரஷ்யாவில் 28 பேருடன் மாயமான விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றது. ரஷ்யாவின் பெட்ரோபாவ்லாக்ஸ்-கம்சாட்கியில் இருந்து பலானா நகருக்கு ஆன்டோனாவ் ஆன் 26 என்ற விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 22 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் இருந்தனர். பலானா விமான நிலையத்தில் தரையிறங்க விமானம் தயாரானபோது விமான கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. ரேடாரில் இருந்தும் விமானம் மாயமானதால் விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. விமானம் வந்த பாதையில் ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மூலம் தேடுதல் பணி நடைபெற்றது. மேலும் விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என அச்சத்தில் கப்பல்களும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.