திருச்சி: மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மனு கொடுக்க சென்ற விவசாயிகளை கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதிக்க போலீசார் மறுத்தனர். ஒரு சில விவசாயிகள், கேட் மீது ஏறி குதித்து உள்ளே செல்ல முயன்றனர். அப்போது அவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து கலெக்டர் அலுவலகம் அருகே விவசாயிகள் மண்டை ஓடுகளை கையில் ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.