அரியலூர்: அரியலூரில் ஒரு கிராமத்திற்கு பேருந்து போக்குவரத்தை துவக்கி வைத்த தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அதே பேருந்தை நீண்ட தூரம் ஓட்டி சென்று கிராம மக்களை வியக்க வைத்தார். அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த ஆனந்தவாடி கிராமத்தில் புதிய வழித்தடத்தில் பேருந்து விடப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்று கொடி அசைத்து பேருந்தை துவக்கி வைத்தார். பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் பேருந்தில் ஏறிய அவர், பேருந்தை இயக்க ஆரம்பித்தார்.