துனிசியா: இத்தாலிக்கு புகலிடம் தேடி சென்ற போது நடுக்கடலில் படகு கவிழ்ந்ததால் லிபிய அகதிகள் 43 பேர் உயிரிழந்தனர். துனிசியா நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள லிபியாவின் சுவாரா நகரில் இருந்து பெண்கள், சிறுவர்கள் உட்பட சுமார் 130 அகதிகள் படகு ஒன்றில் ஐரோப்பா நோக்கி புறப்பட்டனர். ஆப்பிரிக்காவுக்கு மிக நெருக்கத்தில் உள்ள இத்தாலியின் லம்பேடெசா என்ற தீவுக்கு செல்ல வேண்டும் என்பது அவர்களின் இலக்கு. ஆனால் துனிசியாவின் ஹார்சேஸ் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்த போது இந்த படகு சற்றும் எதிர்பாராத வகையில் கடலில் கவிழ்ந்தது.