தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே முள்ளக்காடு பகுதியில் நடந்து சென்ற நபரிடம் சிலர் வழிப்பறியில் ஈடுபட்டதாக முத்தையாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக முத்தையாபுரம் போலீசார் 5 ரவுடிகளை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பிடிப்பட்டவர்களில் ஒருவரான பானா வேல்முருகன் (29) என்பவரின் செல்போனை சோதனையிட்டபோது அரிவாளால் கேக் வெட்டி அவர் பிறந்தநாள் கொண்டாடியது தெரியவந்தது.