திண்டிவனம்: மின்மயானம் செப்பனிடும் பணியை அதிமுகவினருக்கு வழங்க கோரி திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையரை அதிமுக எம்எல்ஏ தலைமையில் அக்கட்சியினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டினர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் மற்றும் அதிமுகவினர் நேற்று நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் ஜஹாங்கிர் பாஷாவை சந்திக்க வந்தனர். அப்போது ஆணையர் வெளியில் சென்றிருந்ததால் அவரது அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் தலைமையில் அதிமுகவினர் தரையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.