திருவாரூர் : திருவாரூரிலிருந்து நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் பொது விநியோக திட்டத்திற்காக 2 ஆயிரம் மெ.டன் அரிசி ரயில் மூலம் அனுப்பும் பணி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதியுடன் முடிவடைந்த காரீப் பருவத்தில் விவசாயிகளிடமிருந்து 7 லட்சத்து 71 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் அனைத்தும் 40 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கிடங்குகள் மற்றும் திறந்தவெளி கிடங்குகள் ஆகியவற்றில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.