கூட்டுறவு சங்கங்கள் வழங்கிய கடன், பயனாளிகள் விவரங்களை இணையத்தில் வெளியிட கோரிய வழக்கு!: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: கூட்டுறவு சங்கங்கள் வழங்கிய கடன், பயனாளிகள் விவரங்களை இணையத்தில் வெளியிட கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. புதுக்கோட்டையை சேர்ந்த கண்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். புதுக்கோட்டை நார்த்தாமலை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் பல்வேறு முறைகேடு நடைபெற்றுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பலர் பனிக்காலத்தின் போது ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: