முக்கிய செய்தி சென்னை இன்று முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை, புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணி தொடக்கம்: தமிழக அரசு அறிவிப்பு Jul 01, 2021 TN அரசாங்கம் சென்னை: இன்று முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை, புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணியை மேற்கொள்வதற்கும் மற்றும் கைவிரல் ரேகைப் பதிவையும் மீள செயல்முறைப்படுத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது என தமிழக அரசு கூறியுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்ததால் இப்பணி தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் 1-ம் தேதி முதல் புதிய ரேஷன் அட்டைக்கு ஒப்புதல் வழங்கும் பணி தொடங்க உள்ளது. மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை அனைத்து மாநிலங்களும் வருகிற 31-ந்தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி நாட்டில் உள்ள ஒருவர் எந்த ரேஷன் கடையில் வேண்டுமென்றாலும் கைவிரல் ரேகையை பதிவு செய்து பொருட்களை வாங்கி கொள்ள முடியும். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகம் இருந்த சூழலால் கைவிரல் ரேகை பதிவு முறை நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வரும் நிலையிலும், ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத் தொகை, விலையில்லா மளிகை பொருட்கள் வழங்கும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியதையடுத்தும் மீண்டும் கைரேகை பதிவு முறை தொடங்கப்படுகிறது. புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த மனுக்கள், அரசால் அறிவிக்கப்பட்ட கொரோனா நிவாரணத்தொகை மற்றும் 14 மளிகைப்பொருட்களின் தொகுப்பு வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், புதிய மனுக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு கோர வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும், கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக களப்பணியாளர்களால் விசாரணைக்கு செல்ல இயலாத சூழ்நிலை காரணமாகவும், தகுதியான மனுக்களை ஒப்புதல் அளிப்பதற்கான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து வேலை; தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழக பாஜ கூண்டோடு மாற்றம்: அமித்ஷா, மோடி அதிரடி முடிவு
டீசல் பயன்பாட்டிற்கு பதிலாக இனி காஸ் மூலம் அரசு பஸ்களை இயக்க திட்டம்; முதற்கட்டமாக சென்னையில் அறிமுகம் செய்ய முடிவு
முதல், இரண்டாம் கட்ட தேர்தல்களில் பாஜக ஆளும் மாநிலங்களில் வாக்குப்பதிவு சரிவு: 2014, 2019 தேர்தல்களை காட்டிலும் குறைந்ததால் கலக்கம்
பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்த பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
கோயில்கள் பற்றிய வழக்கு தொடர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் நேர்மையை நிரூபித்தால் மட்டுமே டெபாசிட் செய்த பணம் திருப்பி தர முடியும்: ஐகோர்ட் உத்தரவு
ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானவர்களை காப்பாற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கோளாறு: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் திமுக புகார் மனு..!!
தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி அகோரத்தின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி..!!
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தொடர்ந்த வழக்கை ஜூலை 19ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
அனைத்து கோயில்களிலும் அறங்காவலர் குழுக்களை நியமிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு 6 மாதம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு மு.க.ஸ்டாலின் பிரதமராக இருப்பார்: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பரபரப்பு கருத்து