தமிழகம் 'அம்மாவின் மறு உருவமே சின்னம்மா'என சசிகலாவுக்கு ஆதரவாக மதுரையில் போஸ்டர் ஒட்டிய மாவட்ட துணைச்செயலாளர்: குழப்பத்தில் அதிமுக Jul 01, 2021 மாவட்ட துணைச் செயலாளர் மதுரோ சசீலா மதுரை: மதுரையில் சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக மகளிர் அணி புறநகர் கிழக்கு மாவட்ட துணைச்செயலாளர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அம்மாவின் மறு உருவமே சின்னம்மா என்ற வாசகத்துடன் திருப்பரங்குன்றம், செல்லூர் பகுதிகளில் சுஜாதா போஸ்டர் ஒட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று அ.தி.மு.க புறநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் சுஜாதா (எ) ஹர்ஷினி சார்பில் ஒற்றை தலைமை வழிநடத்த, ஒன்றரை கோடி தொண்டர்களின் தூயர் தீர்க்க, கட்சியை துரோகிகளிடம் இருந்து காப்பாற்ற வரும் அம்மாவின் மறு உருவமே சின்னம்மா என்ற வாசகத்துடன் மதுரை திருப்பரங்குன்றம், அவனியாபுரம், வில்லாபுரம், அண்ணாநகர், செல்லூர் மற்றும் மாவட்டம் முழுவதிலும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளார். மதுரையில் முதன்முறையாக சசிகலாவிற்கு ஆதரவாக மாவட்ட கவுன்சிலர் ஒருவர் போஸ்டர் ஒட்டியதைத் தொடர்ந்து இன்று மீண்டும் அ.தி.மு.க மகளிர் அணி புறநகர் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் நிர்வாகிகளிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வை வழிநடத்த சசிகலாவை வேண்டுகோள் விடுக்கும் வகையில் அ.தி.மு.க தொண்டர்களுடன் சசிகலா தொலைபேசியில் பேசும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அ.தி.மு.க.வில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். ஆனால் யார்? யாரிடமோ? போன் போட்டு பேசி அதை சசிகலா காட்சிப்படுத்தி வருகிறார் என நேற்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார்.
உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7-ம் தேதி முதல் இ-பாஸ் வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
ஷப்பா… வெயில் தாங்க முடியல… நீர்நிலை சார்ந்த இடங்களை நாடும் சுற்றுலா பயணிகள்: திற்பரப்பு அருவி, கடலில் உற்சாக குளியல்
தமிழகம் – கேரளா எல்லை அருகே சிறுத்தை தாக்கி விவசாயி படுகாயம்: தேடுதல் வேட்டையில் குட்டி சிறுத்தை சடலம் கண்டுபிடிப்பு
டீசல் பயன்பாட்டிற்கு பதிலாக இனி காஸ் மூலம் அரசு பஸ்களை இயக்க திட்டம்; முதற்கட்டமாக சென்னையில் அறிமுகம் செய்ய முடிவு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மே 1ம் தேதி சித்திரை மாத லட்சார்ச்சனை மகாபிஷேகம்: இன்று மாலை சிறப்பு ஹோமம் தொடக்கம்
பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்குவதைத் தடுக்கும் வகையில், இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும்: ஐகோர்ட்
பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்கச் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: ஐகோர்ட் எச்சரிக்கை
ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு மே 7 முதல் இ-பாஸ் அமல்படுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு