பிரிட்டோரியா: தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 15 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கடந்த 2009ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை அதிபராக இருந்த ஜேக்கப் ஜூமா, தனது 9 ஆண்டுகால பதவி காலத்தில் ஆயுதங்கள் வாங்கியதில் ஊழல் போன்ற பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்த போதிலும் ஆளும் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் நெருக்கடியால் 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜேக்கப் ஜூமா அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.