புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்காமல் முதலமைச்சர் ரங்கசாமி இழுத்தடிப்பதால் பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் சுயேட்சைகள் 12 பேர் டெல்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர். புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி சார்பில் கடந்த மே 7ம் தேதி முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்றார். அமைச்சர், சபாநாயகர் பதவி பிரிப்பதில் இழுபறி ஏற்பட்டு ஒரு வழியாக என்.ஆர். காங்கிரசுக்கு 3 அமைச்சர்கள், பாஜகவுக்கு ஒரு சபாநாயகர், 2 அமைச்சர் என 55 நாட்களுக்கு பிறகு கடந்த 27ம் தேதியன்று பதவியேற்றனர்.