திருமயம்: புதுக்கோட்டை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய கிடங்கில் தீ பிடித்து எரிந்ததில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகியது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நற்சாந்துபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தின் பின்புறம் உள்ள பழைய கட்டிடத்தில் மருத்துவமனைக்கு தேவையான மிஷினரி சாமான்கள், பிளீச்சிங் பவுடர், கொசு மருந்து, நாப்கின்கள் சேமித்து கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. இந்த கட்டிடத்தில் நேற்று காலை திடீரென புகை வருவதாக அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சேமிப்பு கிடங்கு அருகில் சென்று பார்த்தபோது தீ மளமளவென பரவி புகை மூட்டத்துடன் கட்டிடம் முழுவதும் எரிய தொடங்கியது.