முக்கிய செய்தி சென்னை சென்னை பூவிருந்தமல்லி அருகே ரூ.200 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு!: வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி..!! Jun 29, 2021 பூவிருந்தமள்ளி சென்னை சென்னை: சென்னை பூவிருந்தமல்லி அருகே ரூ.200 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டிருக்கிறது. சென்னை பூவிருந்தமல்லி அருகே மேவலூர்க்குப்பம் என்ற கிராமத்தில் சுமார் 36 ஏக்கர் நிலமானது தனியார் நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கக்கூடிய இந்த நிலம், ஒரு சில நபர்களால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு புறம்போக்கு நிலத்தில் தோட்டம், கட்டிடங்கள் அமைத்திருந்தனர். இதுகுறித்து பல முறை புகார் எழுந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையில் வருவாய் துறையினர் அதிரடியாக அப்பகுதியில் ஆய்வு செய்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். தொடர்ந்து இந்த நிலம் அரசாங்கத்திற்கு சொந்தம் எனவும், நிலத்தை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு பலகை வைத்தனர். இதேபோன்று அருகில் உள்ள மற்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். தற்போது மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் 200 கோடிக்கு மேல் இருக்கும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குமரி மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்; 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
மஞ்சள் காய்ச்சலுக்காக தனியார் மருத்துவமனையில் போடப்படும் தடுப்பூசிக்கான சான்று விமான நிலையத்தில் ஏற்கப்படாது :அமைச்சர் மா.சுப்ரமணியன்
கங்கை ஆற்றங்கரையில் வழிபாடு நடத்திய பின், பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல்: வாரணாசியில் 3வது முறையாக போட்டி!!
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே வரும் 19ம் தேதி தொடங்க வாய்ப்பு :கொளுத்தும் வெயிலுக்கு நடுவே வானிலை மையம் “ஜில்” அறிவிப்பு!!
பெண்கள், சிவப்பு வண்ண உதட்டுச்சாயம் பூசினால் அபராதம்: வடகொரிய நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் விநோத அறிவிப்பு
4ம் கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பு; 96 தொகுதிகளில் 63% வாக்குப்பதிவு: ஆந்திராவில் பல இடங்களில் வன்முறை கல்வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு
ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இன்று முதல் 18ம் தேதி வரை மருத்துவ, தடுப்பூசி முகாம்: பொது சுகாதாரத்துறை திட்டம்
வரும் 20ம் தேதி 49 தொகுதியில் நடைபெறும் 5ம் கட்ட தேர்தலில் 695 பேர் போட்டி: 12% பெண் வேட்பாளர்கள் மட்டுமே பங்கேற்பு
சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றம்: விரைவில் தெளிவான முடிவு கிடைக்கும்.! தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் பேட்டி
ஆந்திரா, தெலுங்கானா உட்பட 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு.!