உலகம் கோவிட் தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி கேட்டு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் கடிதம் Jun 29, 2021 இந்திய மருந்து நிர்வாகம் இந்தியா அமெரிக்கா: அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனம், தான் தயாரித்துள்ள கோவிட் தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி கேட்டு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் (டிசிஜிஐ) விண்ணப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவசர காலத்தில், 18 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் இந்த மருந்தை பயன்படுத்த, விரைவில் அனுமதி கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அனுமதி கிடைத்த உடன் முதல்கட்டமாக, 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, அவர்களின் உடல்நிலை உன்னிப்பாக கவனிக்கப்படும். மாடர்னா நிறுவனத்தின் மருந்தை இந்தியாவில் இறக்குமதி செய்து, விற்பனை செய்ய மும்பையை சேர்ந்த சிப்லா என்ற மருந்து நிறுவனமும் டிசிஜிஐ அமைப்பிடம் விண்ணப்பித்து உள்ளது.விண்ணப்பத்தில். இந்த மருந்திற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால், ஆரம்ப கட்ட பரிசோதனை இல்லாமல், இந்தியாவில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இந்த தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்னர், 100 பேருக்கு தடுப்பூசி போட்டு, அது குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சிப்லா நிறுவனம் கூறியுள்ளது. சிப்லா நிறுவனத்தின் விண்ணப்பம், டிசிஜிஐயின் பரிசீலனையில் உள்ளதாகவும், இந்த வாரத்தில் அனுமதி கிடைத்து விடும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
‘சும்மா விளையாட்டா சொன்னேன்’ ராகுல் குறித்து கூறியதை சீரியசாக கருத வேண்டாம்: ரஷ்ய செஸ் வீரர் விளக்கம்
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி