பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக 5ம் தேதி ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் ஹட்ரோ கார்பன் திட்டத்தை  கைவிட வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்தும், கொரோனா தொற்று பரவல் காரணமான டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், கட்டுமான பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், மின்சாரம் போன்ற விலைவாசி உயர்வை கண்டித்தும் தேமுதிக சார்பில்  வரும் 5ம் தேதி காலை 10 மணியளவில், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறை அனுமதியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: