மும்பை: ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒன்டே, 3 டி.20 போட்டிகளில் ஆட உள்ளது. இதற்காக இந்திய அணியினர் இன்று மும்பையில் இருந்து கொழும்பு புறப்படுகின்றனர். இதையொட்டி நேற்று கேப்டன் தவான், பயிற்சியாளர் ராகுல்டிராவிட் ஆகியோர் ஆன்லைனில் பேட்டி அளித்தனர். அப்போது தவான் கூறியதாவது: இது ஒரு புதிய சவால். நாங்கள் நன்றாக செயல்படுவோம் என்று நம்புகிறோம். திறமையை வெளிப்படுத்த இது ஒரு அருமையான வாய்ப்பு. எப்போது களம் இறங்கி அடித்து நொறுக்குவோம் என ஆர்வமுடன் காத்திருக்கிறோம், என்றார்.