விஜயவாடா: ஆந்திராவில் அரசுத் துறைகளுக்கு பணியாளர்களை நியமிப்பதற்காக, ஆந்திர மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. இதில், வெற்றி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, நியமன உத்தரவு வழங்கப்பட்டு வந்தது.
இந்த நேர்முகத் தேர்வில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு இருந்ததால், கடந்த 2019ம் ஆண்டு துணை கலெக்டர்கள், டிஎஸ்பி, துணை ஆணையர்கள் போன்ற உயர் அதிகாரிகள் நியமனத்துக்கான குருப் -1 பிரிவை தவிர, மற்று அனைத்து பிரிவுகளுக்காக நேர்முகத் தேர்வையும் முதல்வர் ஜெகன் மோகன் ரத்து செய்தார்.