தூத்துக்குடியில் 3 பேர் மீது ஆசிட் வீச்சு

தூத்துக்குடி: தூத்துக்குடி அசோக்நகரை சேர்ந்தவர் ரவி (50). இவர் சிப்காட்டில் லாரி வாட்டர் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி மாலா (49). இவருக்கும் தூத்துக்குடி பி அன் டி காலனியை சேர்ந்த சூசை (48) என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த ரவி, இருவரையும் கண்டித்து வந்துள்ளார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சூசை மற்றும் அவரது மகன் கெல்வின் (19) ஆகியோர் மாலாவை பார்க்க வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த ரவி ஆத்திரத்தில் அவர்களிடம் தகராறு செய்து, வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்து மாலா, சூசை மீது ஊற்றியுள்ளார். இதனை தடுத்த கெல்வின் மீதும் ரவி ஆசிட்டை ஊற்றினார். காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Related Stories: